Breaking News
தமிழகத்தில் மார்ச் -30 முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

:தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச்-24) நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் குமாரசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
காப்பீடு தொகை உயா்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை உயா்த்தியதை கண்டித்தும் மார்ச்-30ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 9 லட்சம் லாரிகள் ஓடாது என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.