Breaking News
இலங்கை கடற்படை அத்துமீறல்: புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளையும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

மீனவர்களையும் படகுகளையும் காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 26 மீனவர்களா சிறைபிடித்துச் சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.