Breaking News
மனை விற்பனை தடை வழக்கு அரசின் மவுனம் கலையுமா?

விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்க தொடரப்பட்ட வழக்கில், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்., 9ல் தடை விதித்தது.

இந்த தடையை நீக்க வேண்டும் என, பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட பதிவுத் துறையும், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் வருவாய் துறையும், உரிய பதில் அளிக்காததால், தடையை நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. இப்போதாவது, தமிழக அரசு, இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்து, உரிய பதிலளிக்குமா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.