Breaking News
அசாம் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அசாமில் போலீஸாருடன் நடந்த மோதலில் போடோ தீவிரவாதிகள் இருவர் நேற்று கொல்லப்பட்டனர்.

அசாமின் சிராங் மாவட்டம், அம்குரி காவல் எல்லைக்குட்பட்ட சிம்லகுரி என்ற இடத்தில், என்டிஎப்பி (எஸ்) இயக்க தீவிரவாதி களின் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அந்த பகுதியை முற்றுகையிட்டு போலீ ஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது போலீஸா ருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். இவர்கள், லுகுஸ் நர்சரி, டேவிட் இஸ்லரி என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் மியான்மரில் பயிற்சி பெற்றவர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சம்பவ இடத்திலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி, 1 கைத்துப்பாக்கி, 1 கையெறிகுண்டு மற்றும் தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.