Breaking News
பிபிசிக்கு பேட்டி கொடுத்தபோது நாய் கடித்து உயிரிழந்த பரிதாபம். இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்

லண்டன் நகரை சேர்ந்த ஒரு நபர் பிபிசிக்கு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென அவர் வளர்த்த நாய் அவர் மீது பாய்ந்து கடித்ததால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிபிசி செய்தி நிறுவனம் லண்டனில் உள்ள நபரின் வீட்டிற்கு சென்று அவரை பேட்டி எடுத்தனர். பேட்டி பதிவாகி கொண்டிருந்தபோது திடீரென பேட்டி கொடுத்த நபர் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த நாய்க்கு வெறி பிடித்தது.,

நாயை சாந்தப்படுத்த உரிமையாளர் போராடியும் பலனில்லாமல் அசுரத்தனமாக மாறி அந்த நாய் உரிமையாளரின் கழுத்தை கடித்து குதறியதால் பேட்டி கொடுத்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சியை நேரடியாக பார்த்த பிபிசி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து பிபிசி நிறுவனம் எவ்வித செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.