Breaking News
போலந்தில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணைக்கு சுஷ்மா உத்தரவு

போலந்தில் இந்திய மாணவர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்தி ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “போலந்திலுள்ள போன்சான் நகரின் பிரபலமான சந்தைப் பகுதியில் இரு இந்திய மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, “இந்திய மாணவர்கள் போலந்தில் தாக்கப்பட்டுள்ளது தொடர்பாக போலந்திலுள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளேன்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.