Breaking News
ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் உயர்ந்தது

ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தும் பல்வேறு தனியார் வங்கியின் தலைமை அதிகாரிகளை விட, இவர்களுடைய சம்பளம் குறைவு தான்.

உயர்வு:

ரிசர்வ் வங்கியின் கவர்னராக, உர்ஜித் படேல், 2016, செப்டம்பரில் பதவியேற்றார். ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முந்த்ரா, என்.எஸ்.விஸ்வநாதன், வி.ஆச்சாரியா ஆகிய நால்வரும் துணை கவர்னர்களாக உள்ளனர்.கவர்னரின் மாத அடிப்படை சம்பளம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2016 முதல்..

துணை கவர்னர்களின் சம்பளம், 80 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 2016, ஜனவரி, 1ம் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.