Breaking News
சிரியாவில் விஷவாயு தாக்குதல் : 100 பேர் பலி

சிரியாவின் வடமேற்கு பகுதியில் விஷவாயு தாக்கியதில் 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 400 பேர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷவாயு தாக்குதல் :

சிரியாவின் வடமேற்கு பகுதியான இட்ளிப் பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டி உள்ளது. மேலும் 400 பேர் வரை மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது .
நேற்று காலை 6.30 மணி முதல் தொடர்ச்சியாக 40 முறைக்கும் மேல் தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.