Breaking News
அலட்சியம் வேண்டாம்… அலர்ட் ப்ளீஸ்!

குழந்தைகளுக்கோ கணவருக்கோ ஏதேனும் பிரச்னை என்றால் துடித்துப் போவார்கள் பெண்கள். அதுவே தமது உடலில் ஏதேனும் பிரச்னை என்றால் முடிந்தவரை அலட்சியப்படுத்துவார்கள்.போதிய ஊட்டமுள்ள உணவு, தூக்கம் துறப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திலும் அலட்சியத்தைக் காட்டும் அவர்களுக்கு உடலில் தெரிகிற சில அறிகுறிகள் ஆபத்தான பிரச்னைகளுக்கான எச்சரிக்கை மணி என்பது புரிவதில்லை. அப்படி அலட்சியம் செய்யக்கூடாத அவசிய அறிகுறிகள் பற்றித் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

கை, கால்களில் ஏற்படுகிற பலவீனம்நூற்றுக்கு 90 பெண்கள் அலட்சியம் செய்கிற விஷயம் உடல் பலவீனம். குறிப்பாக கை, கால்களில் ஏற்படுகிற அசதி மற்றும் வலிகளை அதிக வேலை செய்ததன் விளைவுகளாக நினைத்துக் கொண்டு அலட்சியம் செய்வார்கள். கை, கால்களில் ஏற்படுகிற சோர்வோ, மரத்துப் போகிற உணர்வோ, முகத்தில் ஒரு பக்கம் மரத்துப் போவதோ பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். நிலை தடுமாறுவது, தலைசுற்றல், நடப்பதில் சிரமம் போன்றவையும் பக்கவாதத்தின் அறிகுறிகளே.

பேசுவதில் குழப்பமோ, கடுமையான தலைவலியோ, மேற்சொன்ன அறிகுறிகளோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக அடிக்கடி தாங்க முடியாத தலைவலி வந்தால் டென்ஷன், சைனஸ் என அதற்கு நீங்களே காரணம் சொல்லித் தட்டிக் கழிக்காமல், ஏதோ பிரச்னையின் அறிகுறி என உஷாராகுங்கள். பக்கவாதம் ஏற்பட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், முழுமையாகக் குணப்படுத்திவிட முடியும்.காரணமற்ற உடல்வலிதினமும் தலை முதல் கால் வரை ஏதோ ஒரு இடத்தில் வலியை உணர்வார்கள் பல பெண்களும். ஆனாலும் எதையுமே முக்கியமாக நினைக்க மாட்டார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத வலி என்றால் வலி நிவாரணியை விழுங்கித் தற்காலிகமாக நிவாரணம் தேடிக் கொள்வார்கள். அதையும் தாண்டி வலித்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்வார்கள்.

ஃபைப்ரோமயால்ஜியா என்கிற வலியாக இருந்தால் அதை வலி நிவாரண மருத்துவர்களால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே, ஒரு மருத்துவரிடம் சென்று உடலில் பிரச்னையே இல்லை என சத்து மாத்திரை களைக் கொடுத்தும் வலி குறையவில்லை என்றால் வலி நிவாரண சிறப்பு மருத்துவரைப் பார்க்க வேண்டும்.நெஞ்சுவலி பெண்களுக்கு அரிதாகவே மாரடைப்பு வரும் என்கிற நிலை மாறி, இன்று ஆண்களுக்கு இணையாகஅவர்களுக்கும் அதிகளவில் ஹார்ட் அட்டாக் வருகிறது.உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நெஞ்சுவலி, அதனுடன் அசாதாரண வியர்வை, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் இன்னும் அதிக எச்சரிக்கை அவசியம். இந்த அறிகுறிகள் எல்லாம் இதய நோய் மற்றும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

தவிர இவை உடலில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்னைகளுக்கான எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு, நுரையீரலை நோக்கி ரத்தக்கட்டி நகரும் போதும் இப்படி ஏற்படலாம். திடீரென இதயமே கனத்த மாதிரி உணர்வது, சில நிமிடங்கள் நீடித்து மறைவது, அடிக்கடி இப்படி ஏற்படுவது போன்றவை அலட்சியம் செய்யப்பட வேண்டியவை அல்ல.முழங்கால் வலி மற்றும் களைப்புஇதுவும் டீப் வெயின் த்ராம்போசிஸ்(Deep vein thrombosis) என்கிற பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட நேரம் கால்களை ஒரே நிலையில் வைத்திருப்பது, பல நாட்கள் படுக்கையில் இருப்பது போன்றவற்றின் விளைவால் இது ஏற்படலாம். ரத்தக் கட்டாக இருந்தால் நடக்கும்போதும் நிற்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். வீக்கமும் தெரியும். காலின் ஒரு பகுதி சிவந்து, வீக்கத்துடன், இன்னொரு காலை விட சற்றே பெரிதாகத் தெரியும்.

பொதுவாக உடற்பயிற்சி செய்த பிறகு இப்படி ஏற்படுவது சகஜம். ஆனால், மற்ற நேரத்திலும் இருந்தால்தான் அலர்ட் ஆக வேண்டும். ரத்தக்கட்டாக இருந்தால் அது வெடித்து தீவிரமான பிரச்னையில் முடிவதற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.சிறுநீரில் ரத்தக் கசிவுசிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவதும் வலிப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாகியிருப்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். அதை அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது மட்டுமின்றி, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், அடக்க முடியாத நிலையும் ஏற்படுவது தொற்றின் காரணமாகவும் இருக்கலாம். சிலருக்கு இத்துடன் காய்ச்சலும் சேர்ந்து கொள்ளும். அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுவது, தாமாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்றவை, அந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வைத் தராது. மாறாக, சிறுநீரகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே… கவனம் தேவை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.