Breaking News
ஐ.பி.எல்., கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பத்தாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடர் இன்று(ஏப்.,5) துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின, காயத்தால் அவதிப்படும் கோஹ்லிக்கு பதில், பெங்களூரு கேப்டனாக களமிறங்கிய வாட்சன், ‘டாஸ்’ வென்று ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

யுவராஜ் விளாசல்:

ஐதராபாத் அணிக்கு வார்னர் (14) ஏமாற்றினார். ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்தார். ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக விளையாடியது. ஹென்ரிக்ஸ் (52) அரை சதம் கடந்தார். யுவராஜ் 27 பந்தில் 62 ரன்கள் விளாசினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. தீபக் ஹூடா (16), பென் கட்டிங் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

நெஹ்ரா அசத்தல்:

கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கெய்ல் (32) சிறப்பான துவக்கம் தந்தார். ரஷித் கான் ‘சுழலில்’ மன்தீப் சிங் (24), டிராவிஸ் ஹெட் (30) சிக்கினர். கேதர் ஜாதவ் 31 ரன்களில் அவுட்டானார். சச்சின் பேபி (1) ஏமாற்றினார். நெஹ்ரா ‘வேகத்தில்’ வாட்சன் (22), அரவிந்த் (0) ஆட்டமிழந்தனர். முடிவில், பெங்களூரு அணி 19.4 ஓவரில் 172 ரன்கள் ஆல்-அவுட்டாகி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.