Breaking News
லாரி நிறுத்தப்போராட்டம் தொடரும்

தென்னிந்திய லாரி நிறுத்தப்போராட்டம் தொடரும் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரிய கடந்த மார்ச்30 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இது குறித்து முதற்கட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று (ஏப்ரல் 7) 2வது கட்டமாக மத்திய அமைச்சருடன் ஐதராபாத்தில் தெ ன்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.