Breaking News
வாட்ஸ்ஆப்பில் சம்மன் அனுப்பிய கோர்ட்

நாட்டிலேயே முதல் முறையாக அரியானாவில் வாட்ஸ்ஆப் மூலம் கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் சம்மன் :

அரியானா மாநிலம் அனுராக் ஷாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்பிர் சிங். இவருக்கும் அவரது சகோதரர்களான ராம்தியாள் மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோருக்கு இடையே குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து சர்பிர் சிங், தனது சகோதரர்கள் மீது அரியானா நிதிஆணையர் கோர்ட்டில் மனு அளித்தார். இந்த மனு மீது பதிலளிக்கும்படி நிதிஆணையர் கோர்ட்டின் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் கேம்கா உத்தரவிட்டார்.

பதிலளிக்க அனுப்பப்பட்ட சம்மனை ராம்தியாள் பெற்றுக் கொண்டார். ஆனால், கிருஷ்ணன் காத்மண்டுவிற்கு சென்று விட்டதால் அவர் சம்னை பெறவில்லை. இதனையடுத்து உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். ஆனால் கிருஷ்ணன் அவர்களிடம் தனது முகவரியை தர மறுத்துள்ளார். இந்த தகவல் அசோக் கேம்காவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது இமெயில் அல்லது மொபைல் எண்ணை முகவரியாக எடுத்துக் கொண்டு சம்மனை அவற்றில் மூலம் அனுப்ப அசோக் கேம்கா உத்தரவிட்டார். இதனையடுத்து கோர்ட் சீல் வைக்கப்பட்ட சம்மன் நோட்டீஸ், பிரிண்ட்அவுட் எடுக்கப்பட்டு, அது வாட்ஸ்ஆப் மூலம் கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டது.

நாட்டில் முதல் முறையாக :

கோர்ட் சம்மன் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படுவது இதுவே முதல்முறையாகும். தற்போது வரை சம்மன்கள் இமெயில் அல்லது பேக்ஸ் மூலமாக தான் அனுப்பப்பட்டு வருகின்றன. வழக்கில் எதிர்தரப்பினருக்கு அனுப்பப்படும் சம்மன் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவே இதுபோன்ற உத்தரவை பிறப்பித்ததாக அசோக் கேம்கா தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.