Breaking News
தமிழகம் முழுவதும் 11 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 11.டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., ரஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தி.நகரில் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் அம்பத்தூருக்கும், தி.மலையில்டி.எஸ்.பியாக பணி புரிந்து அழகேசன் சென்னை மாநகர உதவி ஆணையராகவும் , மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த வந்த வின்சென்ட் ஜெயராஜ் சென்னை அசோக் நகருக்கும் , அம்பத்தூரில் பணி புரிந்து வந்த ஏ.பி செல்வன் தி.நகருக்கும், சென்னை அசோக்நகரில் பணிபுரிந்து வந்த ஹரிகுமார் வணிகவரித்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்துவந்த ரவிச்சந்திரன் ராஜபாளையம் டி.எஸ்.பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர துணை ஆணையராக பணி புரிந்து வந்த ராஜேந்திரன் காஞ்சிபுரத்திற்கும், கோட்டூர் புரத்தில் பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் வில்சன் பூந்தமல்லிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பூந்தமல்லியில் பணிபுரிந்து வந்த முத்தழகு எழும்பூருக்கும், சென்னை புலனாய்வு பிரிவில் பணி புரிந்து வந்த ராஜ காளியப்பன் மாதவரம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவிற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எழும்பூரில் பணிபுரிந்து வந்த பிரகாஷ் சேலம் எஸ்.சி . எஸ்.டி விஜிலென்ஸ் பிரிவிற்கும் அழகேசன் காவலர் சமுதாய நலன் பிரிவிற்கும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.