Breaking News
மொபைல் போன்களே உங்களின் வங்கியாக இருக்கும்: பீம் ஆப் அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ஆதார் அட்டை வாயிலாக மொபைல் போன் செயலி மூலம் பணம் செலுத்தும் முறையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஏராளமான மக்கள் செய்த தியாகம் காரணமாக நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும். தீக்சாபூமிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இடத்தில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தியது பெருமையளிக்கிறது. பீம் ஆப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. அம்பேத்கர் கனவை நாம் இணைந்து நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.

குறைந்தளவு பணம் பயன்பாடு என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்றும் அதிகளவு பணம் பயன்படுத்துவது என்பது அதிக பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி பேசினார். இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள பீம் ஆப் அதிகம் பேருக்கு நேர்மையான பாதிப்பை ஏற்படுத்தும். மொபைல் போன்களே உங்களின் வங்கியாக இருக்கும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.