Breaking News
சீனாவில் பரிதாபம் பஸ் விபத்தில் 13 பேர் பலி

சீனாவில் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சீனாவின் தென்மேற்கு மாகாணம் கியுஸூ. இந்த மாகாணத்தின் கைய்யங்-வெங் கவுன்டி வழித்தடத்தில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. விபத்து குறித்து கேள்விப்பட்டு மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். நண்பகல் 12 மணி வரை மீட்பு பணி நடைபெற்றது. இந்த விபத்தில் 13 பேர் இறந்தனர்.

மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளில் 4 பேரை காணவில்லை. விபத்துக்குள்ளான பேருந்து 19 இருக்கைகள் கொண்டது. ஆனால், அதிகளவில் பயணிகள் பஸ்ஸில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. விபத்துக்களில் உயிர் இழப்புகள் ஏற்படுவது பெரும் பிரச்னையாக சீனாவில் உருவெடுத்துள்ளது. ேமலும், அங்கு போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பது கிடையாது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.