Breaking News
பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அம்மா அணி குழு அமைப்பு: பன்னீர்செல்வம் வரவேற்பு

பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அம்மா அணி குழு அமைந்துள்ளதற்கு பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். ஒரே குடும்பத்துடன் கட்சி செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., அதிமுக கொள்கைகளை மாறாமல் கொண்டு செல்ல யார் விரும்பினாலும் இணைய தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று மாலை பெரியகுளத்தில் இருந்து மதுரை வழியாக விமானத்தில் சென்னை வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களுடன் சந்திக்க உள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தனது அணியில் இருக்கும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.