Breaking News
டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்

டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அமித் மாலிக் ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸில் வேட்பாளர் தேர்வில் மூத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன்காரணமாக டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி நேற்று பாஜகவில் இணைந்தார். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அமித் மாலிக்கும் பாஜகவில் ஐக்கியமானார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, டெல்லி மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் இருவரையும் வரவேற்றனர். டெல்லி மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் பாஜகவில் இணைந்திருப்பது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, அமித் மாலிக் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நேற்று அந்த கட்சியில் இணைந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.