Breaking News
தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன? – 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கேரளாவைச் சேர்ந்த கொடுங்கல்லூர் திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்லா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நாடாளுமன்றம், சட்டப்பேரவை கள், நீதிமன்றங்கள், பள்ளி, கல்லூரிகளில் ‘ஜன கன மன’ தேசிய கீதம், ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் இசைக்கப்படுவது குறித்த மத்திய அரசின் கொள்கை குறித்து 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத் தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சக்கர நாற்காலி பயன்படுத்து வோர், ஆட்டிசம், தொழுநோயாளி கள் உள்ளிட்டோர் திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

திரையரங்கில் தேசிய கீதம் இசைப்பதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்திருப்பது வருத்த மளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.