Breaking News
டில்லி விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்

டில்லியில் கடந்த 1 மாத்திற்கும் மேலாக நடந்து வந்த விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வங்கிகடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

அய்யாகண்ணு சக போராட்டகாரர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, 2 நாட்களுக்கு போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாகவும், ஏப்.,22ம் தேதிக்குள் அமைச்சரிடம் இருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் முழுமையாக போராட்டம் வாபஸ் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.