Breaking News
2 பாகங்களாக வெளியீடு: ஜூன் 23-ம் தேதி ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ முதல் பாகம் வெளியாகிறது

‘அன்பாவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜூன் 23-ம் தேதி முதல் பாகம் வெளியாகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. 3 தோற்றங்களில் ‘மதுரை மைக்கேல்’ தோற்றம் மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. ‘அஸ்வின் தாத்தா’ தோற்றத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெறவிருந்த தாய்லாந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அக்காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாகம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

ஜூன் 23-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளதால், எடிட்டிங் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.