Breaking News
விசா விதிமீறல் புகார் – இங்கிலாந்தில் 38 இந்தியர்கள் கைது

இங்கிலாந்தில் விசா விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மிட்லண்ட் பிராந்தியத்தில் லைசெஸ்டர் நகரில் உள்ள 2 ஜவுளி தொழிற்சாலைகளில் இங்கிலாந்து குடியேற்றத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், போலீஸ், வருவாய்த்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த சோதனையில், 9 பெண்கள் உள்பட 38 இந்தியர்களும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 32 பேர், விசா காலத்தை கடந்து தங்கி இருந்ததும், 7 பேர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததும் தெரிய வந்தது. இவர்களின் விதிமீறலுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளும் உடந்தையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால், ஒரு தொழிலாளிக்கு 20 ஆயிரம் பவுண்டு வீதம் அந்த தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.