Breaking News
பிரதமர் மோடி, ஆதித்யநாத்திற்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

லண்டனை சேர்ந்த காஷ்மீர் குழுக்களால் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்திற்கு ஆபத்து என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு படைக்கும் இது தொடர்பான எச்சரிக்கை தகவல்தெரிவிக்கப்பட்டு உள்ளது என உயர்மட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.
லண்டனை சேர்ந்த சில காஷ்மீர் பயங்கரவாதிகள் குறி பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யாநாத் மீது இருக்க வாய்ப்பு இருக்கிறது என உளத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. எச்சரிக்கையின்படி பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவிவிட்டனர், அவர்கள் சில குழுவாக ரெயில் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்ய முயற்சி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சதி திட்டங்கள் தீட்டுவது யார்?

இதுபோன்ற சதிதிட்டங்களை தீட்டுவது யார் என்பது குறித்து மராட்டிய மாநில போலீசும் விசாரித்து வருகிறது. ஏற்கனவே இருதலைவர்களும் உயர்மட்ட பாதுகாப்பு வளையத்திலே இருக்கிறார்கள். இந்த உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கடந்த வாரம் டில்லி உள்துறை அமைச்சகத்தில் சிறப்பும் ஆலோசனை கூட்டமும் நடந்து இருக்கிறது. யோகி ஆதித்யநாத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.