Breaking News
தமிழக மீனவர்களை தாக்கக்கூடாது: ரணிலிடம் பிரதமர் வலியுறுத்தல்

எந்த சூழ்நிலையிலும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்பு:

அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டில்லி வந்துள்ளார். இன்று காலை வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்த அவர், பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். இருவரும் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மனிதாபிமானம்:

இந்த சந்திப்பின் போது, எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது எந்த சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது. தமிழக மீனவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பை இலங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.