Breaking News
லஞ்சம், ஊழல் மாநிலம்: முதலிடம் யாருக்கு?

பொதுப்பணித்துறைகளில் மக்களுக்கு சேவை செய்வதற்காக லஞ்சம் அதிகம் பெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்திற்கு 3வது இடம் :

ஊழல் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடம் கர்நாடகாவுக்கும், 2வது இடம் ஆந்திராவிற்கும் கிடைத்துள்ளது. இவற்றை தொடர்ந்து தமிழகம், மகாராஷ்டிரா, காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
ஊடக ஆய்வு மையம் சார்பில் 20 மாநிலங்களில் ஊழல் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் ஊழல் குறைவாக காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் இமாச்சல பிரதேசம், கேரளா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 53 சதவீதம் பேர், அதாவது 3 ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் அரசு திட்டங்களை பெற லஞ்சம் கொடுத்துள்ளனர்.

தலைவிரித்தாடும் லஞ்சம் :

நகர மற்றும் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறப்பட்ட பிறகு நவம்பர் மற்றும் டிசம்பரில் லஞ்சம் குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 20 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 அரசு சேவைகளை பெற 2017 ம் ஆண்டில் இதுவரை ரூ.6,350 கோடி லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. 2005 ல் ரூ.20,500 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு என்ன வழிகள் என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.