Breaking News
சிறப்பு சுற்றுலா பட்டியல்: ஒகேனக்கல் நீக்கம்

காவிரி ஆறு வறண்டதால், சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆறு வறண்டுள்ளதால் ஒகேனக்கல் அருவி பகுதியில் பாறைகள் மட்டுமே காட்சி அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு பயணிகளை அழைத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் வருகையும் நின்று போனதால், ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.