Breaking News
நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.

போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்.,2ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 1000 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.