Breaking News
19 மாவட்டத்தில் சூறைக்காற்று: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிக வெப்பம்:

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் 6 நாட்கள் துவங்குகிறது. இதனால் கோடை வெயில் மேலும் தீவிரமடையும். அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே மிக அதிக அளவிலான வெப்பம் நிலவுகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது.

சூறைக்காற்று:

இதன் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் இன்று சூறைக்காற்று வீசும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.