Breaking News
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மாணவர்கள் இடையே மீண்டும் மோதல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் – மாணவர்கள் இடையேயான மோதல் வெடித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

கடந்தவாரம் நடந்த மாணவர் போராட்டத்தின்போது 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அந்த மாணவர்களை விடுவிக்கக் கோரி இன்று (திங்கள்கிழமை) மேஜூர் மெமோரியல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் புல்வாமா அரசுக் கல்லூரி மாணவர்களும் காவல் நிலையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் பேரணியாகச் சென்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனையடுத்து மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வலுத்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த 1-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.