Breaking News
நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா உயர் நீதின்மன்ற நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் இச்சோதனையை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார்களை வெளியிட்டதோடு பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பினார்.

இதனையடுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகாததால், அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி மேற்குவங்க போலீஸ் டிஜிபி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகளும் தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு வரும் 4-ம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி, “கர்ணனை சமாளிக்க வேண்டும் இல்லையென்றால் நீதித்துறை தனது பெருமையை இழக்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.