Breaking News
பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகளுக்கு ஒரே நேரத்தில் தூக்கு

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பர்க்கத் அலி, முகமது அடில், இஷாக், லத்தீப் உர் ரகுமான். இவர்கள் 4 பேரும் தலீபான் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள்இவர்கள்4 பேரும் கொலை, பயங்கரவாத வழக்குகளில் சிக்கி இருந்தனர். இவர்கள் அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்ததாகவும், ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்குக்கு ஆதாரமாக ஆயுதங்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை முதலில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளிலும், பின்னர் பாகிஸ்தான் அரசு அமைத்துள்ள ராணுவ கோர்ட்டுகளில் நடந்தன.

அப்போது 4 பேரும் தங்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டுகள் தீர்ப்பு வழங்கின.

இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 பேரும் நேற்று ஒரே நேரத்தில் தூக்கில் போடப்பட்டனர். இது குறித்த தகவலை பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை (ஐ.எஸ்.பி.ஆர்.) ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் அவர்கள் எந்தெந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர், எங்கு வைத்து அவர்கள் தூக்கில் போடப்பட்டனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.