Breaking News
ரஜினி, பா.இரஞ்சித் இணையும் புதிய திரைப்படம் மே 28-ல் தொடக்கம்

ரஜினிகாந்த், பா.இரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மே 28-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க பா.இரஞ்சித் ஒப்பந்தமானார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப் பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவா வில் தங்கியிருந்து படத்தின் கதை தயாரிப்பு பணி யில் பா.இரஞ்சித் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று தனுஷ் தெரிவித்திருந் தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது. இதற் காக தாராவியின் செட்டை சென்னையில் அமைக்கும் பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் வரும் 28-ம் தேதி முதல் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.