Breaking News
கெஜ்ரிவாலுக்கு எதிராக இன்று சிபிஐ.,யில் புகார் அளிக்கிறார் கபில் மிஸ்ரா

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா நேற்று பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என காங்கிரசும், டில்லி அரசையே கலைக்க வேண்டும் என பா.ஜ.,வும் கூறி வருகின்றன. இந்நிலையில் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிஐ.,யிடமும், லஞ்ச ஒழிப்பு துறையிடமும் இன்று புகார் அளிக்க உள்ளதாக கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களையும் சமர்பிக்க உள்ளார். இதனால் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.