Breaking News
டெல்லிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: ஜாகீர் கான் நம்பிக்கை

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பையிடம் 146 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்றது. இதைத்தொடர்ந்து அந்த அணி 11 ஆட்டங்களில் 8 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே டெல்லி அணியின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர் கான் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் வாய்ப்புகள் இருப்பதாகவே கருது கிறேன். அதற்கு இனிவரும் ஆட்டங் களில் வென்றாக வேண்டும். மற்ற போட்டிகளின் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப் படாமல் சிறப்பாக ஆடவேண்டும். நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து ஆடி வலிமையாக மீண்டுவருவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.