Breaking News
பிரான்சின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்றுமுன்தினம் நடந்த இறுதி கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ என்கிற இயக்கத்தின் தலைவர் இமானுவல் மேக்ரன் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் பொருளாதார மந்திரி ஆவார்.

பதிவான மொத்த ஓட்டுகளில் மெக்ரனுக்கு 2 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரத்து 797 ஓட்டுகள் கிடைத்தது. இது 66.1 சதவீதம் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணியின் பெண் வேட்பாளர் மரின் லீ பென் 1 கோடியே 6 லட்சத்து 44 ஆயிரத்து 118 ஓட்டுகள் பெற்றார். இது 33.9 சதவீதம் ஆகும். 25.44 சதவீத வாக்காளர்கள் இறுதி கட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மெக்ரன் வெற்றி பெற்றதை பிரான்ஸ் அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரான்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மெக்ரனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘மெக்ரனின் அமோக வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியா– பிரான்ஸ் உறவை இன்னும் வலுப்படுத்துவதில் புதிய அதிபர் மெக்ரனுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.