Breaking News
குரூப்-2ஏ பணிகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு: மே 15 முதல் 17 வரை நடக்கிறது

குரூப்-2-ஏ பணிகளுக்கு மே 15 முதல் 17-ம் தேதி வரை 2-வது கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார், வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

குரூப்-2ஏ-தேர்வில் அடங்கிய 2014-2015 மற்றும் 2015-2016-ம் ஆண்டுக்கான காலியிடங்களை (நேர்முகத்தேர்வு அல்லாத பணி கள்) நிரப்ப கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வின் முடிவு ஜுன் 8-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. தேர்வுக்கான 2-வது கட்ட சான்றி தழ் சரிபார்ப்பு மார்ச் 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அதற்கான கலந்தாய்வு மே 15 முதல் 17-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

விரைவஞ்சலில் அழைப்பாணை

இந்த கலந்தாய்வுக்கு அழைக் கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் களின் பதிவெண் பட்டியல் மற் றும் தரவரிசையின்படி கால அட்ட வணை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டு இருக்கிறது. கலந்தாய்வு தொடர் பாக சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு கலந்தாய்வு நாள், நேரம் குறிப்பிடப்பட்டு அழைப் பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையை தேர் வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண் ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

மறுவாய்ப்பு கிடையாது

எனவே, நடைபெற உள்ள 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட் டுள்ள விண்ணப்பதாரர்கள், அவர் கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக் கீடு மற்றும் நிலவும் காலிப்பணி யிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப் படுவர். எனவே கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என் பதற்கான உறுதி கூற இயலாது. கலந்தாய்வுக்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.