Breaking News
நாமக்கல் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு : சிபிசிஐடி.,க்கு மாற்றம்

நாமக்கல் ஒப்பந்ததாரரும், அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருமான சுப்ரமணியன் தற்கொலை செய்த கொண்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற போது, அவரது நெருங்கிய நண்பரான சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் மே 8 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சுப்ரமணியன் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சோதனைக்கு அழைக்கப்பட்ட மே 8 ம் தேதி சுப்ரமணியன் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று (மே 12) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.