Breaking News
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

சிக்கபள்ளாபூர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபருக்கும், பெங்களூரு சர்ஜாபுரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 13ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்காக சிக்கபள்ளாபூரில் உள்ள சீனிவாஸ் திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. பெண் வீட்டார் இரவு திருமண மண்டபத்துக்கு பெண்ணை அழைத்து வந்தனர். அங்கு இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தனர். திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

இந்நிலையில் 17 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமண மண்டபத்துக்கு வந்து இருவீட்டாரையும் அழைத்து குழந்தை திருமணம் நடத்தி வைப்பது கிரிமினல் குற்றம். எனவே திருமணத்தை நிறுத்திவிடுங்கள். பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய பின் திருமணத்தை நடத்துங்கள் என ஆலோசனை வழங்கினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.