Breaking News
சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள் பலி

பப்புவா நியூ கினியாவில் உள்ள, சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளை பிடிக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 17 கைதிகள் பலியாகினர்.தென்மேற்கு பசிபிக் நாடான, பப்புவா நியூ கினியாவில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள், லே நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.இந்நிலையில், சிறையில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில், சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, அங்கிருந்து, பல கைதிகள் தப்பிச் சென்றனர்.
அவர்களை பிடிப்பதற்காக, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 17 கைதிகள் பலியாகினர். தப்பிச் சென்றவர்களில் பலர், மீண்டும் கைது செய்யப்பட்டனர்; மேலும், சிலகைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.