Breaking News
காளீஸ்வரி குழும நிறுவனத்தில் ஐ.டி., ரெய்டு

காளீஸ்வரி குழும நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐ.டி., ரெய்டு:

காளீஸ்வரி எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், பெங்களூரு, புதுச்சேரி, காக்கிநாடா உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 38 இடங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் 46 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சோதனையில் நூற்றிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு:

ஐ.டி., ரெய்டு நடக்கும் இடங்களில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

வாகனங்களில் சோதனை:

மயிலாப்பூர் அலுவலகத்தில் 2 வாகனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வாகனங்களில் ஏதேனும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற ரீதியில் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.