Breaking News
மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவர்

ஆஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த கணவன், உடலை குக்கரில் சமைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் நகரை சேர்ந்தவர் மார்கஸ் வோல்கி (27), இந்தோனேசியாவை சேர்ந்த மயாங் பிரசெட்டியோ (23) என்பவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்தார்.2014, அக்டோபரில் மார்கஸ் வோல்கி, வீட்டில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்ட தாக, மின்சார அலுவலகத்துக்கு தெரிவித்து உள்ளார். கோரிக்கையை பதிவு செய்து கொண்ட ஊழியர் வீட்டிற்கு வந்து உள்ளார். அங்கு சமையல் அறையை சுற்றி, வினோத மான பொருட்கள் சிதறி கிடந்ததை கண்ட ஊழியர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, மார்கஸ் வோல்கி தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு இறந்தார். தொடர்ந்து சமையல் அறையில் சோதனை செய்தபோது, குக்கரில் அவரது மனைவியின் உடல் துண்டு,துண்டாக வெட்டப்பட்டு கொதித்து கொண்டிருந்தது தெரிய வந்தது. கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் தெரியவர வில்லை. இத்தகவலை போலீசார் தற்போதுதான் வெளியிட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.