Breaking News
கற்பழிக்க முயன்றவரின் ஆணுறுப்பை அறுத்த இளம்பெண்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை இளம்பெண் ஒருவர் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பெட்டாக் என்ற நகரில் வசிக்கும் நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக உள்ளார். வீட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் மனைவியும், மகளும் கொல்லத்தில் ஆசிரமம் நடத்தும் ஹரிசுவாமி என்பவரை அழைத்து வந்துள்ளார். அவரும் பல வருடங்களாக இங்கு வந்துள்ளார். அப்போதெல்லாம் அவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஹரிஸ்வாமி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், ஹரிஸ்வாமியின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்தார். ஹரிஸ்வாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண் 10ம் வகுப்பு படிக்கும் போது முதல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து தாயாருக்கும் தகவல் தெரிந்துள்ளது. ஹரிசுவாமி மீதும், தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.