Breaking News
நாசா – இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்

நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் (NISAR) என்ற புதிய செயற்கைகோளை உருவாக்கி வருகின்றன.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. நாசா -இஸ்ரோ சிந்தடிக் அபெர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கைகோள் மூலம் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம், உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய முடியும். இந்த செயற்கைகோளில் 24 செ.மீ., எல் பிராண்ட் ரேடார், 13 செ.மீ., எஸ் பிராண்ட் ரேடார் என 2 விதமான ரேடார்கள் உள்ளன.
இதில் எஸ் பிராண்ட் ரேடார் இஸ்ரோவாலும், எல் பிராண்ட் ரேடார் நாசாவாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் 1.5 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்படுகிறது. இந்த நிசார் செயற்கைகோள் வரும் 2021-ம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.