Breaking News
‘பிரபுதேவா – கார்த்திக் சுப்புராஜ்’ படத்தை ஒரே கட்டமாக முடிக்க திட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் சுப்புராஜ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்பாக, பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என தீர்மானித்து, ஒரே கட்டத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிந்து வருகிறார்.

பிரபுதேவாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் படத்தின் தலைப்பு அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.