Breaking News
போலி பத்திரிகையாளர்குண்டர் சட்டத்தில் கைது

பலரை பணம் கேட்டு மிரட்டி பணிய வைக்க நினைத்த போலி பத்திரிகையாளன் பூந்தமல்லியைச் சேர்ந்த வி.அன்பழகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளான்.
சென்னைக்கு இரண்டு நாள் போலீஸ் கஸ்டடியில் கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டான்.
போலீசிடம் தான் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறித்த விவரத்தை ஒப்புக் கொண்டான்.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பின்னர் அன்பழகனை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும் அன்பழகன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தான் செய்து வந்த செயலுக்கு இது நாள் வரை உடந்தையாக இருந்து வந்தவர்கள் பற்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்பேரில் ராமன்,
பெருமாள், அசுத்துல்லா, ஸ்டாலின், ரஞ்சித், பாண்டியன், சங்கர், நூருல்லா, சாந்தகுமார், மார்க்கெட் பாபு, ஜெயவீரன், கந்தசாமி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.