Breaking News
சிவகார்த்திகேயன் கையில இப்போ 30 லட்சம் பேர் இருக்காங்களாம்! எப்படி தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் இடத்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயனாகத்தாக் இருக்கும். பத்தே படங்களில் நடித்த ஒரு நடிகர், அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கின்றார் என்றால் அது சாதாரண விஷயமில்லை. இவருடைய படங்களின் ஓப்பனிங் வசூலே இவர் ஒரு மிகப்பெரிய தவிர்க்க முடியாத ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியாவிலும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்புக்காக இவர் மலேசிய சென்றபோது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு டுவிட்டரில் இணைந்த சிவகார்த்திகேயனுக்கு ஆறே ஆண்டுகளில் 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கிடைத்துள்ளனர். அதாவது 30 லட்சம் ஃபாலோயர்கள் டுவிட்டரில் என்பது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

தனக்கு டுவிட்டரில் கிடைத்த இந்த மிகப்பெரிய கெளரவம் குறித்து சிவகார்த்திகேயன் கூறியபோது, ‘இப்போது எனது பாலோயர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது. இதற்காக சகோதர, சகோதரிகளுக்கும் நல விரும்பிகளுக்கும் எனது நன்றி என்று தெரிவித்துள்ளார். இதே போல, சிவகார்த்திகேயனுக்கு பேஸ்புக் பக்கத்தில் சுமார் 20 லட்சம் பேர் பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.