Breaking News
லண்டனில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் : தெரசா மே எச்சரிக்கை

லண்டன் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரித்துள்ளார். நாட்டிற்கு அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதால் கவனமாக இருக்கும்படி ராணுவ வீரர்கள், விளையாட்டு போட்டிகள் நடத்துவோர், மற்ற பொது நிகழ்ச்சிகளை அவர் எச்சரித்துள்ளார்.
அச்சுறுத்தல் அளவு மிக அதிகமாக உள்ளதாலும், மிக மோசமான நிலையை நாடு எதிர்நோக்கி இருப்பதாலும் பிரிட்டன் நகர வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் போலீசாருக்கு பதிலாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இறங்கும்படி தெரசா மே கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து நடந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெரசா மே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.