Breaking News
விஜய்யை விட பெரிய ஆளா சிவகார்த்திகேயன்? டுவிட்டரில் வலுக்கும் சண்டை

பொதுவாக டுவிட்டரில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் சண்டை நடப்பது என்பது தினசரி நடக்கும் நடைமுறை. இந்த சண்டையை விஜய், அஜித்தே நினைத்தாலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை முதல் விஜய் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் டுவிட்டரில் மோதி வருகின்றனர். காரணம் இதுதான். விஜய் பல வருடங்களாக டுவிட்டரில் இருந்தும் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள்தான் வைத்துள்ளாராம். ஆனால் சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுவிட்டார், அதனால் விஜய்யை விட சிவகார்த்திகேயன் தான் டுவிட்டரில் கெத்து என்று ஒரு ரசிகர் ஒரு டுவீட்டை தட்டிவிட போர் ஆரம்பித்துவிட்டது.

வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் தங்கள் எதிரியை காய்ச்சி எடுக்க டுவிட்டரில் ஒரு மினி போரே நடந்து வருகிறது. இதற்கு இடையில் ஜெயம் ரவிக்கு 1.6 மில்லியன் ஃபாலோயர்கள் என்றும் பிரேஜிக்கு 1.4 மில்லியன் பாலோயர்கள் என்றும் அவர்களுடைய ரசிகர்கள் கடுப்பேற்ற கடந்த சில மணி நேரங்களாக ஒரே ரணகளமாகியுள்ளது டுவிட்டர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.