Breaking News
ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற அ.தி.மு.க. இரு அணிகளையும் நரேந்திரமோடி மிரட்டுகிறார்

தமிழகத்தின் முன்னாள், இன்னாள் முதல்–அமைச்சர்கள் பிரதமர் நரேந்திரமோடியை ஒருவர் பின் ஒருவராக சென்று சந்தித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எந்த அணி பலமான அணி என்பதை பார்த்து பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளின் ஆதரவு எம்.பி.க்களின் வாக்குகளை பெறுவதற்காக மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார், நரேந்திரமோடி. மோடியின் பொம்மலாட்ட காட்சிகள்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே மோடி, அமித்ஷாவின் செயல்கள் தான்.

மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம் உள்ளது. இதையெல்லாம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை. விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.