Breaking News
காதலியின் அமில வீச்சில் காதலன் சாவு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் ஆத்திரம்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 24). இவர் குண்டூரில் உள்ள கல்லூரியில் படித்தபோது ஹிமாபிந்து என்ற பெண்ணை தீவிரமாக காதலித்தார். அவரையே திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இருவரும் ஒன்றாகவே சுற்றி திரிந்திருக்கிறார்கள்.

ஆனால் காதலித்த பெண்ணை உதறித் தள்ளிவிட்டு, ரோஸ்மேரி என்ற பெண்ணை கடந்த 22–ந் தேதி, முகமது இலியாஸ் திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி ஹிமாபிந்துவுக்கு தெரியவந்தபோது, ஆத்திரத்தில் கொந்தளித்தார். முகமது இலியாசுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இருவருக்கும் அறிமுகமான காசிம் என்ற நண்பரின் வீட்டுக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறினார்.

அதைத் தொடர்ந்து காசிம் வீட்டுக்கு முகமது இலியாஸ் வந்தார். அவரைப் பார்த்த உடன், ஹிமாபிந்து தயாராக மறைத்து வைத்திருந்த அமிலத்தை எடுத்து அவர் மீது ஊற்றினார். அதில் உடலுறுப்புகள் வெந்த நிலையில், அலறியடித்துக்கொண்டு முகமது இலியாஸ் ஓட்டம் எடுத்தார். அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி எடுத்துக்கொண்டு, பின்னர் குண்டூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த அமில வீச்சு சம்பவத்தின்போது, ஹிமாபிந்துவின் கையிலும் அமிலம் கொட்டி காயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ஹிமா பிந்து
தலைமறைவாகி விட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.