Breaking News
அரியானாவில் கைதான பாகிஸ்தானியரிடம் ஆதார், பான்கார்டு பறிமுதல்

அரியானா மாநிலம் பகதுர்கார்க் பகுதியில் நேற்று பாகிஸ்தானை சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2013ம் ஆண்டு முதல் அங்கு வசித்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவர் வீட்டில் நடந்த சோதனையில், சிந்த் லர்கானாவில் உள்ள இந்து காலனி முகவரியில் பெறப்பட்ட பாஸ்போர்ட் சிக்கியது. மேலும் அவர் வீட்டில் இருந்து பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நிலையில், ஹரியானாவிலும் மற்றொரு பாகிஸ்தானியர் கைதாகியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.